கரூர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

 கரூர் விவசாயிகள் மானிய விலையில் வேளாண் எந்திரங்களை  பெற்று கொள்ளலாம்
கரூர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி


மானிய விலையில் வேளாண் எந்திரங்களை விவசாயிகள் பெற்று கொள்ளலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்


உற்பத்தியையும்,  நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் வேளாண் எந்திரமயமாக்குதலுக்கான துணை திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம்  வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது. நடப்பு 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலையில் வேளாண்மை - உழவர் நலத்துறை வித்தவாறு கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 31 விசை களையெடுக்கும் கருவி (பவர்வீடர்) 32 ஆகியவை வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது


தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்டசமாக ரூ.1.20 லட்சம், விசை களையெடுப்பான்களுக்கு மானியம் ஆதிதிராவிடர், அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம், பழங்குடியினர் பிரிவினைச்

அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


வேளாண் எந்திரங்கள்

கரூர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி


இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.


ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் வாங்கிட 20 சதவீத கூடுதல் மானியமாக ரூ.48,000-ம், விசை களையெடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25,200- ம் வழங்கப்பட்டு வருகிறது. . எனவே, பவர் டில்லர்கள் வாங்கிட அதிகபட்சமாக ரூ.1,68,000-ம், விசை களையெடுக்கும் கருவி வாங்கிட அதிக பட்சமாக ரூ. 88,200-ம் வரை

சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.


மானியம்



பொதுபிரிவினைச்சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூ.12,600 விசை களையெடுக்கும் கருவி வழங்கப்படுகிறது. எனவே, ஒட்டுமொத்தமாக விசை களையெடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ.75,600 வரை மானியம் பொது பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயி கள் தங்களின் பங்களிப்பு தொகையினை இணையவழி (RTGS/NEFT) அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது வினியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவர் டில்லர், விசை களையெடுக்கும் கருவி போன்ற வேளாண் எந்திரங்களை மானியத்தில்

பெற்றுக் கொள்ளலாம். மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகம், கரூர் அல்லது வருவாய் கோட்ட அளவில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை அல்லது வட்டார அளவில் உதவிபொறியாளர். இளநிலைபொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்

புதியது பழையவை

نموذج الاتصال