தீபாவளி பண்டிகைக்கு ரூ.438 கோடிக்கு மது விற்பனை
கடந்த ஆண்டைவிட இந்த வருடம் ரூ.29 கோடி குறைந்தது
நம் தமிழகம் எதில் எதிலோ சாதனை படைத்தாலும் தவிர்க்க முடியாத சாதனைகளில் ஒன்று இந்த சாராய சாதனை ஆகும்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு ரூ.438 கோடியே 53லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. ஆனாலும், மாத இறுதி என்பதால் விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.29 கோடி சரிவை சந்தித்துள்ளது.
ரூ.438கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளது இதில் தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு - மது விற்பனை நடக்கிறது. வார இறுதி நாட்களின் அது - ரூ.200 கோடியாக அதிகரிக் கிறது. அதுவும் பண்டிகை நாட்கள் என்று வரும்போது, ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியாக உயர்கிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ந்தேதி | ரூ.202கோடியே 59 லட்சத்துக்கும். தீபாவளி நாளான 31-ந்தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள் ளது. வழக்கம்போலவே இந்த ஆண்டும் பிராந்தியே அதிகம் விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 12-ந்தேதி தீபாவளி /பண்டிகை வந்தது. அன்றைய தினமும், முந்தைய நாளும் சேர்த்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு மது விற்பனையானது. அதை வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டு ரூ.29 கோடியே 10 லட்சம் அளவுக்கு மது விற்பனை குறைந்துள்ளது.
விற்பனை குறைவுக்கு காரணம் என்ன?
இதற்கு, இந்த ஆண்டு மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வந்தது காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும், டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் வேறு காரணம் சொல்கிறார்கள். தமிழ் நாட்டில் டாஸ்மாக் கடை களின் எண்ணிக்கை 1,500 குறைந்தபோதும், மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது எனவே அங்கு விற்பனை அதிகமாகி வருவதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
திருச்சி மண்டலத்துக்கு 3-வது இடம்
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருந்தாலும், மது விற்பனை செய்ய வசதியாக அவைகளை 5 மண்டலங்களாக டாஸ்மாக் நிர்வாகம் பிரித்து வைத்துள்ளது. அந்த வகையில், சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை என 5 மண்டலங்கள் உள்ளன.
சென்னையில் மண்டலத்தில் ரூ.47.16 கோடி. அடுத்த நாள் ரூ.54.18 கோடி விற்பனையானது.
மதுரையில் ரூ.40.88 கோடிக்கும் அடுத்த நாள் ரூ.47.33கோடிக்கும் விற்பனையானது.
திருச்சியில் ரூ.39.81 கோடி அடுத்த நாள் ரூ46.51 கோடிக்கும் விற்பனையானது.
சேலத்தில் ரூ.38.34கோடி அடுத்த நாள் ரூ. 45.18 கோடிக்கும்
கோவை மண்டலத்தில் ரூ.36.40 கோடிக்கும் அடுத்த நாள் ரூ.42.34 கோடிக்கும் விற்பனையானது.
தனியாருக்கு செல்கிறது
கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு (2022) தீபாவளி பண்டிகையின்போது 2 நாட்கள் ரூ.519 கோடியே 77 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை குறைந்து வருவதுபோல் தெரிந்தாலும், மனம் மகிழ் மன்றங்கள், ஓட்டல்களு டன் கூடிய பார்களின் எண்ணிக்கையும், அதில் விற்பனையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அரசுக்கு மது விற்பனை மூலம் வர வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.
பொதுவாக, பண்டிகை காலங்களில் மதுரை மண்டலத்தில்தான் மது விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு சென்னை மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, கடந்த மாதம் 30-ந்தேதி சென்னை மண்டலத்தில் ரூ.47 கோடியே 16 லட்சத்துக்கும். 31-ந்தேதி ரூ.54 கோடியே 18 லட்சத்துக்கும் மது வகைகள் விற்பனையாகியுள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது.
இந்த விற்பனையில் அதிகமாக பிராந்தி வகை சரக்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.