நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா கடுமையான குற்றச்சாட்டுகனை அடுக்கி வெளியிட்ட அறிக்கை, தென்னிந்திய திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனுஷ் அதற்கு இதுவரை பதில் சொல்லவில்லை. ஆனால், நயன்தாரா இப்போது கிளப்பி இருக்கும் விவகாரத்தில், தப்பு தனுஷ் மீது இல்லை என்று காட்டும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று நயன் பிறந்த நாள்; 39 வயது முடிந்து, 40 வயதில் அடி எடுத்து வைக்கிறார். இதைக் கொண்டாடும் விதமாக 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம் ஒரு டாக்குமென்டரி வெளியிடுகிறது. அதன் தயாரிப்பாளர்கள் நயனும், கணவர் விக்னேஷ் சிவனும்.
சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் அடுத்தடுத்து உறவு முறிந்து, நயன்தாரா சோர்ந்திருந்த நேரத்தில், 'நானும் ரவுடி தான்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன்.
படத்தின் பட்ஜெட் அதிகமானதால் இயக்குனர் மீது தனுஷுக்கு அதிருப்தி ஏற்ப்பட்டது.கடைசி கட்டத்தில் படத்தை கைவிட்டு விடலாம் என்று நினைத்தார். நயன்தாரா வற்புறுத்தி ரொம்பவும் தனுஷ் மனதை மாற்றினார். இயக்குனருடன் காதல் உருவாவது அதற்கு முக்கிய காரணம். படப்பிடிப்பு தளத்தில் காட்சி அமைப்பது மற்றும் ஒத்திகை - என்ற பெயரில் இருவரும் காதல் வளர்த்தனர். மொத்த யூனிட்டும் வேடிக்கை பார்த்தது; ஊருக்கும் தெரிந்தது.
படத்தின் காட்சிகளோடு, இவர்களின் காதல்களும் காட்சி கேமராவில் பதிவாகின. காட்சிகளுக்கு பின்னால் அல்லது பி.டி.எஸ்., என்று அந்த பதிவுகளை சொல்வார்கள். ஆனால் நெட் பிளிக்சை கவர்ந்தது அந்த நிஜக்காதல் காட்சிகள்தான். டாக்குமென்டரியில் அந்த சீன்களை சேர்க்க வேண்டும் என்றனர். நயன் சம்மதித்தார். நல்ல விலை கொடுக்க ஒப்புக்கொண்டு நெட்பிளிக்ஸ் ஒப்பந்தம் போட்டது; அவர்கள் கேட்ட காட்சிகளை நயன் தாரா கொடுத்தார்.
செல்போனில் வேறு ஒரு நபரால் பதிவு செய்த காட்சிகள் என்று, நெட் பிளிக்சிடம் நயன்தாரா மற்றும் விக்னேஷும் கூறி இருந்தனர். ஆனால் 'நானும்ரவுடி தான்' படத்தை ஷூட் செய்த அதே கேமராவில் பதிவான காட்சிகள் தான் இவை என்று, நெட்பிளிக்ஸ் தெரிந்து கொள்ள அவகாசம் தேவைப்படவில்லை. படத்தின் தயாரிப்பாளரிடம், இந்த காட்சிகளை டாக்குமென்டரியில் சேர்த்துக் கொள்ள எழுத்துபூர்வ அனுமதி வாங்கி தாருங்கள் என்று நயனிடம் கேட்டது நெட்பிளிக்ஸ்.
காதல் தம்பதிக்கு உடனே புரிந்தது. சிக்கலில் மாட்டிக் கொண்டோம் என்பது. 'நானும்ரவுடி தான்' மீண்டும் ரிலீஸ் செய்ததில் இருந்தே இருவருக்கும் உறவு சரி இல்லை. கடனும், வட்டியும் எகிறியதால், அடிமாட்டு விலைக்கு படத்தை அவர் கைமாற்றி விட்டார். படம் நன்றாக ஓடியதால், வாங்கியவருக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பணம் நிறைய கிடைத்தது. தனுஷுக்கு பத்து பைசா கிடைக்கவில்லை.
போதாக்குறைக்கு திருமணத்துக்கே அவரை, நயனோ, விக்னேஷோ அழைக்கவில்லை.
பேச்சுவார்த்தையே நின்று போனது. இப்போது அனுமதி கேட்டால் எப்படி தருவார் என்றாலும், நெட்' பிளிக்ஸ் கொடுத்த நெருக்கடியால் தனுஷுக்கு கடிதம் எழுதி கேட்டார் நயன்தாரா. எதிர்பார்த்தது போலவே தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை. இரண்டு வருடம் ஆகியும் தனுஷ் அசைந்து கொடுக்கவில்லை.
வேறு வழியில்லை என்ற நிலையில், பி.டி.எஸ்., பதிவுகளை நீக்கி, வேறு படங்கள், வீடியோ துண்டுகள் சேர்த்து டாக்குமென்டரியை ரீஎடிட் செய்தனர். ஆனால், அந்த காட்சிகளில் ஒன்றை இதில் சேர்த்தும் வெளியிட்டனர்.
டிரெய்லர் பார்த்த தனு ஷுக்கு ஷாக். நாம் கொடுக்காமல் இந்த காட்சிகள் நயனுக்கு எப்படி கிடைத்தன என்று திகைத்தார். தனதக்கு தெரியாமல் தனக்கு சொந்தமான படைப்பை பயன் படுத்தியதற்காக, 10கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் தனுஷ் அனுப்பினார்.
நெருங்கிய நண்பர்
நெட்பிளிக்சிலும் விசாரித்த போது தனுஷுக்கு தெரிந்தது, மொத்த பி.டி.எஸ்., பதிவுகளும், அவரது ஒண்டர் பார் கம்பெனியில் இருந்தே நயன் கைக்கு போயிருக்கிறது என்பது. அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவரே இதை நயனுக்கு கொடுத்திருக்கிறார் என்பதும், இதற்காக அவருக்கு நயன்தாரா 1 கோடி ரூபாயில் கார் வாங்கி தந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
ஆனாலும், அந்த நபர் கெட்ட எண்ணம் கொண்டவர் அல்ல என்பதாலும், நட்பு வட்டத்தில் இருப்பதாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தனுஷ் விரும்பவில்லை என்கின்றனர்.