நான் அரசியலுக்கு வந்திருந்தால் எல்லாவற்றையும் இழந்திருப்பேன்'
மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு நான் அரசியலுக்கு வந்திருந் தால் எல்லாவற்றையும் இழந்திருக்க வேண்டியதுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரம்
சென்னையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஜானகி அம்மாள் 100ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் video மூலம் பேசிய வாழ்த்து உரை LED திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஜானகி அம்மாளிடம் எம்.ஜி.ஆர்.. 'ரஜினிகாந்த் திரைப்படங்களில் நிறைய சிகரெட்' குடிக்கிறார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை இளைஞர்கள் பின் தொடர்கிறார்கள். இதை பார்த்து அவர்களும் இந்த பழக்கத்துக்கு ஆளாகி விடுகிறார்கள். எனவே அவர் சினிமாவில் இதை செய்யக்கூடாது. இதை சரியான நேரத்தில் அவரிடம் சொல்கிறேன்' என்று சொன்னதை என்னிடம் தெரிவித்தார். இது என்னால் மறக்க முடியாது.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜானகி அம்மாள் அரசியலுக்கு வந்தது விபத்து, அவருக்கு கொஞ்சம் கூட அரசியலில் ஈடுபாடு. இஷ்டம் கிடையாது. பிறர் வற்புறுத்தியதால்
சூழ்நிலை கைதியாக அவர் அரசியலுக்கு வந்து முதல்அமைச்சர் ஆனார் பின்னர், தேர்தல் வந்தபோது இரண்டு அணியாக பிரிந்து, ADMK.வின் பிரம்மாஸ்திரமான 'இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, வேறோரு சின்னத்தில் அவர் நின்று படுதோல்வியையும் சந்தித்தார்.
நான் அரசியலுக்கு வந்திருந்தால்...
'நான் 2017-ல் அரசியலுக்கு வருவேன்' என்று சொன்னேன், அப்போது நிறைய பேர் என்னை சந்தித்து ஆலோசனை சொல்ல வந்தார்கள் அந்த ஆலோசனை களை கேட்டிருந்தால் அவ்வளவுதான் எல்லாவற்றையும் இழந்து, நிம்மதியையும் இழந்து சென்றுவிட வேண்டியதுதான்.
ஒருமுடிவை எடுக்கும் போது உனக்கு மட்டும் சந்தோசம் திருப்தி என்றால் அந்த முடிவை எடுக்க கூடாது. மற்றவர்களுக்கும் சந்தோசம். திருப்தி என்றால் அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதேபோல ஜானகி அம்மாள் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அவராகவே முடிவு எடுத்து ஜெயலலிதாவை அழைத்து
அரசியல் எனக்கு சரிபட்டு வராது அதற்கு நீங்கள்தான் சரி. உங்களிடம் திறமை, தைரியம், பக்குவம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை இன்னும் முன்னுக்கு கொண்டு வருவதற்கு உங்களால்தான் முடியும். அது என்னால் முடியாது. எங்கே கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டு கையெழுத்து போட்டார்
'இரட்டை இலை' சின்னத்தை மீட்டு ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து, அரசியலில் இருந்து ஒதுங்கி கொண்டார். இது எவ்வளவு பெரிய குணம். அவருக்கு விமர்சையாக 100ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள எடப்பாடிபழனிசாமி உள்பட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் கோட்டைகள்
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் 'வீடியோ' மூலம் வாழ்த்து செய்தி தெரிவித்திருந்தார். அதில் அவர், ஜானகி அம்மாள் தங்களுக்கு வழங்கிய தங்க மோதிரம். எம். ஆர். திரைப்படத்தில் அணிந்திருந்த கோட்டைகள், எம்.ஜி.ஆர் பயன்படுத்தியபிரசார வாகனம் பற்றிய தகவல்களை புகைப்படங்களுடன் சுவாரசியமாக பகிர்ந்தார்.
ஜானகி அம்மாள் விஜயகாந்துக்கு வழங்கிய இந்த கோட்டை எந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அணிந்திருந்தார் என்பதை தனக்கு அ.தி.மு.க.வினர் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.